|
வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள் நினைவுகளை நினைவூட்ட பஞ்சு மிட்டாய் சாப்பிடச் சிறு வயதில் ஆசை அதைப் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் வாய் முழுதும் முகம் முழுவதும் ஒட்டிக் கொள்ளும் அம்மாவிடம் சண்டையிட்டு வாங்கி கையில் பிடிக்கும் வெற்றி ஒருபுறம் சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மறுபுறம் எவ்வளவு எளிமையான வாழ்க்கை இன்றும் பஞ்சு மிட்டாய் பார்க்கிறேன் எளிதில் வாங்க முடியும் யாரிடமும் சண்டையிட வேண்டாம் வாங்கினேன் சாப்பிட்டேன் வெற்றி இல்லை, ஆவல் இல்லை மனதில் தீராத ஏக்கம், நாவில் இனிப்பு சுவையை விட ஏக்க சுவை அதிகம் இருந்தும் ஒவ்வொரு முறையும் வாங்குவேன் என் நினைவுகளை நினைவூட்ட
|